Site icon Tamil News

வவுனியாவில் 300போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வவுனியா கோவில்குளம் சந்தியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான ‘Pregabalin’ என்ற 300 மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் விற்பனைக்காக மாத்திரைகளை எடுத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமத்திய கடற்படை கட்டளையில் உள்ள SLNS பாண்டுகாபயவின் கடற்படை வீரர்களால் பொலிஸ் STF – மதுகந்தவின் ஒருங்கிணைப்புடன் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகத்தின் பேரில் சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை கோவில்குளம் சந்தியில் தேடியபோது, ‘பிரீகபலின்’ எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளின் 300 மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வவுனியாவைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும், சந்தேகநபர் 300 ‘Pregabalin’ மாத்திரைகளுடன் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Exit mobile version