Site icon Tamil News

நாளை முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் – அமைச்சர்

தேசிய எரிபொருள் கடவு QR அமைப்புக்கான எரிபொருள் ஒதுக்கீடுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வாடகையில் ஈடுபடும் பதிவுசெய்யப்பட்ட டாக்சி முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீற்றரும், மற்ற முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீற்றரும், மோட்டார் சைக்கிள்களுக்கு 14 லீற்றரும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

கார்கள் வாரத்திற்கு 40 லிட்டர் கோட்டாவைப் பெறும் என்று அவர் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்பட்ட புதிய எரிபொருள் ஒதுக்கீடு செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் வழங்கப்படுமென அமைச்சர் தெரிவித்தார்

Exit mobile version