Site icon Tamil News

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு

சிங்கப்பூரில் உள்ளஅரசாங்க வைத்தியசாலைகளில் தாதியர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, முதல் குழுவைச் சேர்ந்த 36 பேர் மே 17ஆம் திகதி இலங்கையில் இருந்து செல்லவுள்ளார்.

இலங்கையில் பயிற்சி பெற்ற தாதியர்களுக்கு சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில் பணியாற்ற முடியும்.

தாதியர் பட்டம் அல்லது டிப்ளோமா மற்றும் பணி அனுபவம் உள்ள வல்லுநர்கள், அரசு தாதியர் பள்ளிகளில் பயிற்சி பெற்ற பின்னர் பணி அனுபவம் உள்ள தாதிகள் தாதியர் தொழிலுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைகளை இலவசமாக அணுகுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்பதுடன் விண்ணப்பதாரர்கள் சிங்கப்பூர் தாதியர் சபை நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தகுதி வாய்ந்த தாதியர் தொழில் வல்லுநர்கள் இரண்டு வருட ஒப்பந்த காலத்திற்கு மாதாந்தம் மூன்றரை இலட்சம் ரூபா முதல் 05 இலட்சம் ரூபா வரை சம்பளமாக பெற முடியும்.

நாட்டிற்குள் நுழைந்த பிறகு, வேலை தேடுபவர்களுக்கு ஒரு முறை 1000 சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் தங்குமிடத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் ஆட்சேர்ப்பு நிறுவனம் கூறியது.

விண்ணப்பதாரர்கள் சிங்கப்பூரில் உள்ள தாதியர் தொழிலை இலவசமாக அணுகுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளதுடன் www.emeraldislemanpower.com என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version