Site icon Tamil News

குருநாகல் முன்னாள் மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக வர்த்தமானி

குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரணவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள 18 குற்றச்சாட்டுகளில் 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மேயரின் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்ததா என்பதை கண்டறிய வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கர்ணகொடவினால் நியமிக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, விசாரணை ஆணைக்குழு வழங்கிய முடிவுகளின்படி, குருநாகல் மாநகர சபையின் மேயர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து துஷார சஞ்சீவ விதாரண 31.12.2022 முதல் நீக்கப்பட்டுள்ளதாக நேற்று (08) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version