Site icon Tamil News

இலங்கையில் கடத்தப்படும் சிறுவர்கள் : அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பரபரப்பு!

மதவாச்சி நகருக்கு அருகில் வைத்து 16 வயது சிறுமியை பலவந்தமாக கடத்த முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கடத்தல் முயற்சி இடம்பெற்ற இடத்திலுள்ள சிசிரிவி காட்சிகள் தொடர்பான விசாரணையில் அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெற்றதாகத் தகவல்கள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும்  வீதியில் காணப்படும் ஏனைய சிசிரிவி காட்சிகளை மதவாச்சி பொலிஸார் பரிசோதித்து  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என தெரிவித்து வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

Exit mobile version