Site icon Tamil News

தென் கொரியாவுக்கு தாமதமாக புறப்பட்ட இலங்கை விமானம்!

தென் கொரியாவுக்குச் சென்ற இலங்கை விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறித்த நேரத்தில் புறப்பட முடியாமல் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 217 பயணிகளுடன் தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு செல்லவிருந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகியுள்ளது.

இச்சம்பவம் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானம் தாமதமாக புறப்படுவதற்கான அனுமதியைப் பெற்ற பின்னர் நேற்று (20.03) காலை 117 பயணிகளுடன் கொரியாவின் இன்சியான் நகருக்கு பறந்தது.

இதன்படி, கொரியாவில் பணிக்காகச் செல்லவிருந்த எஞ்சிய 100 பயணிகள் மார்ச் 24ஆம் திகதி தென்கொரியாவின் இன்சியான் நகருக்குச் செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த தாமதம் காரணமாக தென் கொரியாவில் அவர்களது வேலைகள் பாதிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version