Site icon Tamil News

இலங்கையில் பொழியவுள்ள விண்கல் மழை : வடபகுதி மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு!

இலங்கையில் வடக்கு வானில் வெற்றுக் கண்ணுக்குத் தெரியும் வகையில் விண்கல் மழையொன்று தோன்றும் என வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பெர்சியஸ் விண்மீன் கூட்டத்திற்கு அருகில் விண்கல் மழை தோன்றியதால் விண்கல் மழை பெர்சியஸ் என்று அழைக்கப்படுகிறது.

ஜூலை நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்ட் நடுப்பகுதி வரை இந்த விண்கல் பொழிவு காணப்படுவதுடன், இன்று (11) நள்ளிரவுக்குப் பின்னர் அதன் உச்சம் ஏற்படும்.

ஒரு மணித்தியாலத்தில் சுமார் நூறு விண்கற்களை காண முடியும் எனவும், சமவெளிக்கு சென்று தடையின்றி பார்வையிட முடியும் எனவும் வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Exit mobile version