Site icon Tamil News

ஐரோப்பாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் இருந்து இலங்கை வந்த பெண்ணை தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் கைப்பையை பறித்து சென்றதாக கூறப்படும் நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்துள்ள நெதர்லாந்து பெண் வீதியில் நடந்து சென்ற போது, காட்டு பகுதியில் மறைந்திருந்த இரண்டு பேர் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் அவரிடம் இருந்த கைப்பையை பறித்து சென்றுள்ளனர்.

அதில் ஆயிரம் யூரோ நாணயம், சுமார் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான செல்போன், 6 ஆயிரம் ரூபா பணம், அழகு சாதனப் பொருட்கள் இருந்ததாக நெதர்லாந்து பெண் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பரகொட பிரதேசத்தை சேர்ந்த கூலி தொழில் செய்யும் 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெலிகம பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version