Site icon Tamil News

பொதுவெளியில் காவலர்களை ஒருமையில் பேசிய பெண்

திருவள்ளூர் அடுத்த அரும்பாக்கத்தில் பொதுவெளியில் காவலர்களை ஒருமையில் பேசிய பெண் ஆய்வாளர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட அரும்பாக்கம் கிராமத்தில் உள்ள மலை குன்றில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பாக்கம் மலைப்பகுதியில்  கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கடந்த 2014-ல் 33 அடி சிலுவை அமைத்தும், 100 அடி கொடி கம்பம் அமைத்தும்  வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த தேவாயத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தேவாலயம் கட்டப்பட்ட இடம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் எனக்கூறி  நில அளவை செய்து வருவதாகவும், ஒரு சில நாட்கள் வழிபாடு செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் கடந்த 17-ந் தேதி.

பென்னாலூர்பேட்டை போலீஸிடம் புகார் அளித்ததை தொடர்ந்து   18-ந் தேதி தேவாலயத்திற்கு செல்லும் வழியில் இது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்தனர்.

இந்த ஆண்டு ஈஸ்டர் பெருவிழாவை முன்னிட்டு 40 நாட்கள் உபவாசம் இன்று குருத்து நாயரான இன்று அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கிராம முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் மேலும்.

கிராமத்தை சுற்றிலும் வெளி ஆட்கள் உள்ளே வராத அளவிற்கு போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் கிராமத்தில்.

குருத்தோலைகளை கையில் ஏந்தி கொண்டு வீதி வீதியாக வந்து தடை செய்யப்பட்ட பகுதிக்குள் போலீசார் தடுப்பையும் மீறி உள்ளே செல்ல முயன்றதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் கிறிஸ்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர், இதனிடையே  தள்ளுமுள்ளு நடைபெற்ற போது  ஊத்துக்கோட்டை மகளிர் காவல் நிலைய.

ஆய்வாளர் திருமதி சத்தியபாமா  அங்கு இருந்த காவலர்களை பிடித்து தள்ளிவிட்டு மரியாதையா வீடியோ எடு, வீடியோ எடுடா எடுடா என்று பொதுவெளியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, மேலும் காவலர்களை ஒருமையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தொடர் சர்ச்சையில் சிக்கும் பெண் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பார்களா உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர், பொதுவெளியில் காவல்துறையினர் மற்றும்   பொதுமக்களிடம் எப்படி பேச வேண்டும் என உயர் அதிகாரிகள் சொல்லித் தர வேண்டும் என கிராம மக்கள் உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் ….

Exit mobile version