Site icon Tamil News

இ வேஸ்ட் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் 5 பொருட்கள் விரைவில் பார்வைக்கு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தி்ன் கீழ் கோவையில் உள்ள குளங்கள் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகியவை தற்போது பொதுமக்கள் அதிகபட்ச பொழுதுபோக்கு இடமாக மாறி உள்ளது. இந்நிலையில் அதனை மேலும் மேம்படுத்தும் வகையிலும் அழகு சேர்க்கும் வகையிலும் எலக்ட்ரானிக் கழிவுகளை கொண்டு காட்சி பொருட்கள் வைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.

உக்கடம் பெரியகுளம் குளக்கரையில் எலக்டிரானிக் கழிவு என்று அழைக்கப்படும் இ வேஸ்ட் கொண்டு 5 பொம்மை பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. வெள்ளலுார் மற்றும் பாரதி பார்க் குப்பை கிடங்கில் இருந்து சேகரிக்கப்பட்ட கணினியின் கீ போர்டு, மவுஸ் மற்றும் பல்வேறு பொருட்களை கொண்டு இந்த பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கிராமா போன், தொலைப்பேசி, கைபம்பு, கார் போன்ற பிரமாண்ட பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

இது கோவை மக்களின் அடுத்த செல்பி பாயிண்டாக விரைவில் உருவெடுக்க உள்ளது.

Exit mobile version