கொழும்பு புறநகர் பகுதியில் பாலியல் வீடியோக்களை இணையத்தில் நேரடியாக வெளியிட்டு பாரியளவிலான பணம் சம்பாதிக்கும் மோசடியில் ஈடுபட்ட இளம் கணவன் மனைவி தம்பதிகள் இருவரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஞ்சாவுடன் ஐஸ் கலந்த போதைப்பொருளுடன் இளம் தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களும் போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாக பொலிசார் கூறுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.