Site icon Tamil News

இந்திய தேர்தல் : 60 சதவீதமான வாக்குகள் கிடைக்கும் – வெங்கடேசன் உறுதி!

மக்களவைத் தேர்தல் குறித்து அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்கியுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் திகதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ம் திகதி நடைபெறுகிறது.

இந்நிலையில், கடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு இந்த முறையும் மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

INDIA கூட்டணி சார்பில் திமுக மதுரை தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் மதுரை வேட்பாளராக சு.வெங்கடேசன் அறிவிக்கப்பட்டார்.

தேர்தல் குறித்து அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று அதிகாலையே தேர்தலுக்கான பணியை துவங்கி விட்டார் சு.வெங்கடேசன். அதன்படி மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் உள்ள தியாகி பாலு அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பணியை தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்தித்து பேசுகையில், கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து பேசி வருவதாகவும், மதுரையில் குறைந்தபட்சம் 60% வாக்கு தங்களுக்கு தான் பதிவாகும், மதுரையில் தாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும் கூறினார்.

Exit mobile version