Site icon Tamil News

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

இஸ்ரேலின் பிரதான விமான நிலையமான பெங்கோரியன் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நாட்களில் இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு வரத் தயாராக இருந்தால், அது குறித்து வேலைவாய்ப்பு நிறுவனத்திடமோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடமோ விசாரிக்க வேண்டும் என்றார்.

இஸ்ரேல் (25) பிரகடனப்படுத்தியுள்ள அவசரகால நிலையின் 48 மணித்தியாலங்களுக்கு பாதுகாப்பாக இருக்குமாறு நாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பான இடங்கள் இல்லாத வீடுகள் மற்றும் பணியிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு ஏதேனும் அவசரத் தேவைக்கு தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு தாம் அறிவிப்பதாக தூதுவர் தெரிவித்தார்.

Exit mobile version