Site icon Tamil News

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் விஜயகலா மகேஸ்வரன்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று (ஜூன் 29) வீதி விபத்தொன்றில் சிக்கிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை புத்தளம் முந்தலம பிரதேசத்தில் வைத்தே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்த விஜயகலா மகேஷ்வரன் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்தார்.

விபத்துக்கான காரணங்கள், வெளியாகாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version