Site icon Tamil News

இறை பக்தியில் நோயை குணமாக்க முயற்சி!! யாழில் உயிரிழந்த தமிழ் ஆசிரியை

யாழ்ப்பாணம் – இளவாலை, குள்ளனை பகுதியில் 38 வயதான பெண் ஒருவர் தீரா வயிற்று நோயினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண் தீரா வயிற்று வலியினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தேவாலயமொன்றுக்கு சிகிச்சை பெறச் சென்ற போது திடீர் சுகவீனம் காரணமாக நேற்று (14) உயிரிழந்துள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட நோய்க்காக யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நோய் குணமாகாததால், கடவுளின் சக்தியால் தனது நோயைக் குணப்படுத்த தேவாலயத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு குறித்த பெண்ணை சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து தேவாலயம் ஊடாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் அவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

எனினும, மரணத்திற்கான காரணம் தெரியவில்லை.

இந்நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் உடலை புதைக்குமாறு கூறி, இன்றைய தினம் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

Exit mobile version