Site icon Tamil News

சினிமா பாணியில் வியாபாரியிடம் பணத்தை கொள்ளையிட்ட சாரதி

அதுருகிரி பகுதியைச் சேர்ந்த கோழி வியாபாரி ஒருவரிடம் மிளகாய்ப் பொடியை தூவி பணத்தை கொள்ளையடித்த பெண் ஒருவர் உள்ளிட்ட இரண்டு  சந்தேக நபர்களையும் ஆத்துருகிரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வர்த்தகரின் லொறியின் சாரதி என்பதும், கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபரின் மனைவியும் அடங்குவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லொறியில் பயணித்த போது உடல் தேவையை பூர்த்தி செய்வதாக கூறி லொறியை நிறுத்திவிட்டு மிளகாய் பொடியை வீசி பணத்தை கொள்ளையடித்து சென்றமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் விசாரணையின் போது சந்தேகநபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட 186,500 ரூபாவை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version