புளூம்பெர்க் சந்தை தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகின் வளர்ந்து வரும் சந்தைகளில் இலங்கை ரூபாய் அதிக செயல்திறன் கொண்ட நாணயமாக மாறியுள்ளது.
ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% க்கும் அதிகமான குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா காலத்தை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமை ரூபாய் கடுமையாக வீழ்ச்சியடைய காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.