Site icon Tamil News

இலங்கையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க வர்த்த அமைச்சர் நளின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி  ஒரு கிலோ நெத்தலியின் விலை 200 முதல் 250 ரூபாவுக்குள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை  1250 ரூபா வரையில் தற்போது விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின் விலையை டிசம்பர் மாதமளவில் 850 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கோழி இறைச்சி  முட்டை,  கருவாடு மற்றும் மீனின் விலைகள் அதிகரித்திருந்தமையால்,  நாட்டில் போஷாக்கு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version