Site icon Tamil News

ONMAX DT நிறுவனத்தின் 05 பணிப்பாளர்கள் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ONMAX DT நிறுவனத்தின் 05 பணிப்பாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் உத்தரவின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான 03 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன், சந்தேகநபர்கள் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என நீதவான் பிணை நிபந்தனை விதித்தார்.

சட்டவிரோத பிரமிட் திட்டத்தை நடத்தியதற்காக அவர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

Exit mobile version