Site icon Tamil News

ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் இருந்த நினைவுத்தூபிக்கு தீவைப்பு

வாழைச்சேனை – ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் உள்ள போர்வீரர் ஒருவரின் நினைவுத்தூபிக்கு சிலர் தீ வைத்துள்ளனர்.

பயங்கரவாத நடவடிக்கைகளின் போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என 187 முஸ்லிம் பிரஜைகளின் பெயர்கள் அடங்கிய நினைவுத்தூபியே தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நினைவுச் சின்னத்திற்கு அருகில் சாக்கு மூட்டைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நினைவுச்சின்னம் எரிவதை அவதானித்த பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் தீயைக் கட்டுப்படுத்த முற்பட்டதுடன், நினைவுச் சின்னத்தின் கீழ்ப் பகுதியின் இரண்டு பக்கங்களும் தீயினால் நிறமாற்றம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version