Site icon Tamil News

சந்நேகநபர்கள் இருவருக்கு விஷம் கொடுத்த விகாரம் ;பொலிஸ் நிலையத்தில் நடந்தது இதுதான்.. வௌியான CCTV!

ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தினுள் சந்தேகநபர்கள் இருவருக்கு விஷம் கொடுத்த நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அண்மையில் ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர்கள், ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, ​​இவர்களின் நலம் விசாரிக்க வந்த நபர் ஒருவரால் விஷம் கொடுக்கப்பட்டிருந்தது.

குறித்த நபர் ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு வருவதற்கு முன்பு அங்குள்ள கடை ஒன்றுக்கும் சென்ற காட்சி சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மேலும், அவரால் விஷம் கொடுக்கப்பட்ட இரு சந்தேகநபர்களுக்கும் அவரும் புகுடு கண்ணா என்ற குற்றவாளியின் உதவியாளர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடு செல்வியின் குழுவின் ஒருவர் மீதே இவர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.அதன்படி, குடு செல்வி தரப்பு இந்த நபருக்கு பணம் கொடுத்து இந்த குற்றத்தை திட்டமிட்டுள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.விஷம் அருந்திய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதி உத்தியோகத்தர் மற்றும் வாயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் பணியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்

Exit mobile version