Site icon Tamil News

வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு சட்ட ரீதியாக செல்லுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஏமாற்று மற்றும் மோசடிக்காரர்களை நம்பி பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டாமென, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

நம்பிக்கை நிதியம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் மத்திய வங்கி என்பவற்றின் சேவைகளை ஒரே இடத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இதற்கமைய, தொழில் திணைக்களத்தால் ஊழியர் சேமலாப நிதி தொடர்பாக விசேட கவனம் செலுத்துவதுடன், EPF பதிவுகளை பரிசீலித்தல், EPF தொடர்பாக பதிவு செய்யாத உறுப்பினர்களை பதிவு செய்தல், விரல் அடையாளங்களை பதிவு செய்தல், பெயர் மற்றும் பதிவுகளில் தவறுகள் காணப்படின் திருத்தம் செய்தல், ஆலோசனை சேவைகள், EPF தொடர்பான தகவல்களை பரிசீலித்தல் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன.

Exit mobile version