நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீதி நடவடிக்கை காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கைகளினால் தற்போது போதைப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் குறிப்பிடுகின்றார்.
கடத்தல்காரர்களால் 2000 ரூபாய்க்கு விற்கப்படும் போதைப்பொருள் பாக்கெட் தற்போது 8 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது என்றார்.
நீதி நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதனால் பொலிஸ் நிலையங்களுக்கு பல தகவல்கள் கிடைக்கப்பெறுவதாகவும், ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளையும் இந்த நடவடிக்கைக்காக தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.