Site icon Tamil News

எரிபொருள் விலை அதிகரிப்பு : முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களை தற்போதைக்கு மாற்றியமைப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித தர்மசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

குறிப்பாக மாதந்தோறும் கட்டணம் மாறும் போது முச்சக்கர வண்டி கட்டணத்தை மாற்ற முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே தனியார் பேருந்து சாரதிகளின் சங்கம் பஸ் கட்டணத்திற்கான கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும் அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

Exit mobile version