Site icon Tamil News

கோட்டாவிற்கு ஏற்பட்ட நிலை ரணிலுக்கு ஏற்படாது – மஹிந்தானந்த உறுதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏற்படாதவாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுதியளிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கோட்டாபய ராஜபக்ஷ அழைத்ததாகவும், ஆனால் அதற்கான தைரியம் அவருக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான நேரத்தில் சவாலை ஏற்றுக்கொண்டு அனைவரும் சுதந்திரமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்கிய ஒரே நபர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியான நாம் எமது ஆதரவை வழங்குவோம்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு நேர்ந்ததை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட அனுமதிக்க மாட்டோம்.

இது அரசியல் பிரச்சினை அல்ல. இது மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினை. தேர்தல் நேரத்தில் அரசியல் செய்யலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version