Site icon Tamil News

முல்லேரியா பெண் கொலையில் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

முல்லேரியாவில் பெண் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மஹர நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அடுத்து விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்று (05) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, ​​அவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த சந்தேக நபர்கள் இரண்டாவது நாள் சட்டத்தரணி ஊடாக சபுகஸ்கந்த பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் சியம்பலாபே தெற்கில் வசிக்கும் 53 வயதான ஒருவராவார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவியதாகக் கூறப்படும் ஒருவரும் பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டாவது சந்தேக நபர் 48 வயதுடையவர்.

முல்லேரிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு தலை மற்றும் கைகால்கள் இல்லாத சடலம் சியம்பலாபே பகுதியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்தனர்.

Exit mobile version