Site icon Tamil News

இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் மற்றும் மகிந்தவிற்கு இடையில் சந்திப்பு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.

இதன்போது   போருக்குப் பின்னரான மறுசீரமைப்பு, கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டம் போன்ற அனைத்து முக்கியமான தருணங்களிலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் இலங்கைக்கு மிகவும் மதிப்புமிக்க உதவிகளைத் தொடர்ந்து வழங்கியமைக்காக  சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  நன்றி தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பை ஆழமாக்குதல் பல்வேறு துறைகளில் பரிமாற்றங்கள்,  ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பொதுவான நலன்கள் தொடர்பான மற்ற விஷயங்கள் குறித்து  அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version