Site icon Tamil News

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை நீக்குவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம்

அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பதவி நீக்கம் செய்வதற்கான யோசனை நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரேரணை முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் முன்வைக்கப்பட்டதுடன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் உறுதிப்படுத்தப்பட்ட அதேவேளை, ஆளும் கட்சியின் பிரதிநிதிகளும் பிரேரணைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் கையொப்பமிடப்பட்ட பிரேரணையின் மூலம் சர்ச்சைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் ரஹீம் தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

ரஹீம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) மே 23 அன்று அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் மொபைல் போன்களுடன் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் இருந்து மொத்தம் 3.5 கிலோ எடையுள்ள அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பின்னர் அவருக்கு ரூ. 7.5 மில்லியன் பணம் செலுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Exit mobile version