Site icon Tamil News

மின்விசிறியில் மோதுண்டு மாணவர் பலி!!! புஸ்ஸல்லாவையில் சம்பவம்

புஸ்ஸல்லாவை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், வகுப்பறையின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதுண்டு, மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த பாடசாலையில் இன்று சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது, குறித்த மாணவன் இன்று பிற்பகல் வகுப்பறைக்கு சென்று, சக மாணவர்களுடன் மேசை மீது ஏறி விளையாடியுள்ளார்.

இதன்போது குறித்த மாணவர் மின்விசிறியில் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, காயமடைந்த அவர் புஸ்ஸல்லாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த மாணவர் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் கிலென்லொக் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புஸ்ஸல்லாவை பொலிஸாரர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version