Site icon Tamil News

மிஸஸ் எர்த் இன்டர்நேஷனல் பட்டத்துடன் நாடு திரும்பினால் சஷ்மி

இலங்கையைச் சேர்ந்த திருமதி சஷ்மி திஸாநாயக்க, அண்மையில் மிஸஸ் எர்த் இன்டர்நேஷனல் 2023 என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்த மகுடத்தைத் தவிர, கேட்வாக்கில் எர்த் பெஸ்ட், கவுனில் ஒவரோல் பெஸ்ட், ரிசார்ட் உடையில் ஒட்டுமொத்த பெஸ்ட், டேலண்டில் பெஸ்ட் என மற்ற அனைத்து பிரிவுகளிலும் சஷ்மி கிரீடங்களை அவர் வென்றிருந்தமை சிறப்பு அம்சமாகும்.

பிலிப்பைன்ஸ், மணிலாவில் உள்ள பே ஏரியா பரனாக் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பிலிப்பைன்ஸ், ஜப்பான், அமெரிக்கா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமான திருமணமான பெண்கள் போட்டியிட்டனர்.

கொழும்பு கேட்வே சர்வதேசக் கல்லூரியில் கல்வி கற்ற சஷ்மியின் பயிற்றுவிப்பாளராக ருக்மல் சேனாநாயக்கவும், போட்டியின் தேசியப் பணிப்பாளராக சரித் குணசேகரவும் செயற்பட்டனர்.

Exit mobile version