முக்கிய அரச நிறுவனங்களின் தலைவர்கள் இருவர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, லேக்ஹவுஸ் தலைவர் மற்றும் தேசிய தொலைக்காட்சி சேவையின் தலைவர் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட, லேக்ஹவுஸ் தலைவராக கடமையாற்றியதுடன், அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளித்துள்ளார்.
இதனிடையே, தேசிய தொலைக்காட்சி சேவையின் தலைவரும் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.