Site icon Tamil News

பாரீஸில் வெளிநாட்டவர் மீது துப்பாக்கி பிரயோகம்- கூட்டத்தை பயன்படுத்தி தப்பியோடிய குற்றவாளி

பாரீஸில் வெளிநாட்டவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், குற்றவாளியை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

பாரீஸிலுள்ள பிரபலமான Champs-Élysées என்ற இடத்தின் அருகே அமைந்துள்ள நடன அரங்கம் ஒன்றின் அருகே மாலி நாட்டைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.48 வயதான அந்த நபர் மார்பில் குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பகுதியில் இருந்த கூட்டத்தைப் பயன்படுத்தி குற்றவாளி தப்பியோடிவிட்டார்.

கொல்லப்பட்ட நபருடைய உடல் மீதே ஒரு துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் அவரை சுட்டவரை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
சுட்டவரும் சுடப்பட்டவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களா என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Exit mobile version