Site icon Tamil News

திருகோணமலையில் 9 வயது சிறுமிக்கு ஆணுறுப்பை காட்டிய பொலிஸ் அதிகாரி கைது

திருகோணமலை-தொவனிபியவர பகுதியில் ஒன்பது வயது சிறுமிக்கு ஆணுறுப்பை காட்டிய குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி தனியாக வீட்டில் இருந்த போது குறித்த நபர் ஆணுறுப்பை காட்டியதாக தாயாரிடம் கூறியதையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹதிவுல்வெவ -தெவனிபியவர பகுதியில் வசித்து வரும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான பட்டிப்பல ஆராச்சிகே சுனந்த ஜயசூரிய எனவும் தெரிய வருகின்றது.

மேற்படி சந்தேக நபர் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி செல்வி ரஞ்சனி உள்ளிட்ட அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version