Site icon Tamil News

கொழும்பில் இருந்துச் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்

ஜப்பான் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கா ஏயார் லயின்ஸிற்கு சொந்தமான விமானம் மீண்டும் கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு 07:50 க்கு புறப்பட்ட விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான A330-300 விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் சக்கரம் உரிய முறையில் செயற்படாமையே, விமானத்தை தரையிறக்க காரணம் என அறிவிக்கப்படுகின்றது.

விமானம் தரையிறக்கப்படும் வரை, குறித்த விமானம் 155 நிமிடங்கள் பயணாத்துள்ளதாக தெரிய வருகின்றது.

Exit mobile version