Site icon Tamil News

கிளிநொச்சியில் பெண் ஒருவரின் அதிர்ச்சி செயல்

கிளிநொச்சியில் 54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு புன்னை நீராவி பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்ட பொலிசார் வீதிச் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, பொதி செய்யப்பட்ட கசிப்பினை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு வேறொரு பகுதிக்கு கொண்டு சென்ற பொழுது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 54 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பினை கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன தருமபுர பொலிசார் பறிமுதல் செய்துள்ளதுடன், சந்தேக நபர் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version