Tamil News

மிகுந்த விரக்தியில் பிரபல நடிகர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்.. மக்களே மீண்டும் சிரிக்க ரெடியா??

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன் இனிமேல் கமர்சியல் படம் மட்டுமே எடுக்கப் போவதாக சொல்லி உள்ளாராம்.

அதுவும் அந்த கமர்சியல் படங்கள் கலக்கலான நையாண்டி கலந்த படமாக எடுக்கவிருக்கிறாராம்.

ஏற்கனவே வடிவேலு உடன் இவர் நிறைய படங்களில் செய்யும் லூட்டி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

இப்போது மீண்டும் அதே ஜானரில் படங்களை எடுக்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் பார்த்திபன் இயக்கும் படத்தில் அவர் நடிப்பாரா என்ற கேள்வியையும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

பார்த்திபனின் வித்தியாசமான முயற்சிக்கு பல விருதுகள் கிடைத்தாலும் எந்த படமும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இது இயக்குனர் பார்த்திபனுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இதையடுத்தே இனிமேல் கமர்சியல் படம் மட்டுமே எடுக்கப் போவதாக சொல்லி உள்ளார்.

Exit mobile version