Site icon Tamil News

கமல் வீட்டு வாசலில் கால்கடுக்க காத்திருந்த ரஜினி!! இன்று தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார்

அபூர்வ ராகங்கள் படம் எடுக்கும் போது, கமல் ஹாசன் வீட்டு வாசலில் ரஜினிகாந்த் காத்திருந்த சம்பவம் தொடர்பில் நடிகை சுஹாசினி தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது, அந்தப் படத்தின் சமயத்தில் கவிதாலயா நிறுவனத்தின் காரில்தான் படத்தில் நடிப்பவர்கள் அழைத்து வரப்படுவார்கள்.

முதலில் கார் ஸ்ரீவித்யாவை ஏற்றிக்கொண்டு பிறகு கமல் ஹாசனின் வீட்டுக்கு செல்லும். கார் வரும்வரை கமல் ஹாசன் தூங்கிக்கொண்டுதான் இருப்பார்.

ஸ்ரீவித்யா வந்தால் நேராக கமலின் வீட்டுக்குள் சென்று காபி சாப்பிடுவது வழக்கம். ஆனால் அந்த சமயத்தில் ரஜினிகாந்த் அறிமுகம் என்பதால் கமல் கிளம்பும் வரை அவரது வீட்டு வாசலிலேயே அங்கும், இங்கும் நடந்துகொண்டிருப்பார்.

அப்போது அவரை கமலின் வீட்டுக்குள் கூப்பிடக்கூட ஆள் இருக்காது. இதனை நடிகை சுஹாசினி பகிர்ந்திருக்கிறார். அப்படி காருக்காக காத்திருந்த ரஜினிதான் இன்று இந்திய சினிமாவின் அடையாளமாக மாறியிருக்கிறார்.

Exit mobile version