Site icon Tamil News

எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி பிறந்தநாளை முன்னிட்டு வழக்கறிஞர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

பூவிருந்தவல்லி குற்றவாளி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளின் அறிமுக கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோ உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பூவிருந்தவல்லியில் செயல்படும் குற்றவியல் நீதிமன்றத்தில் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்களின் அறிமுக கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இதில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் இதேபோல் உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர் இளங்கோ உட்பட அரசியல் பிரமுகர்கள்.

மூத்த வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இந்த விழாவின்போது புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வழக்கறிஞர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

Exit mobile version