Site icon Tamil News

அதிமுக பிரமுகர் வீட்டில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புது மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன்-45.

இவர் நேற்று இரவு தனது மனைவியுடன் மேல் மாடியில் உள்ள அறையில் இரவு தூங்கி கொண்டு பின்னர் காலையில் எழுந்து வெயிட்டிங் கீழ் பகுதியில் பார்த்தபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் 4.5 லட்சம் ரொக்கம் சுமார் 1/4 கிலோ எடை கொண்ட வெள்ளி பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு கிராமிய போலீசார் வீட்டின் பின்புறம் உள்ள கதவை உடைக்கப்பட்டிருந்ததை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆற்காடு கிராமிய போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து திருடிச் சென்றுள்ள மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்..

அதைத்தொடர்ந்து திருடு போன வீட்டிற்கு வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவைத்து வீடு முழுவதும் சோதனை செய்து வருகின்றனர்.

Exit mobile version