Tamil News

ஜெய்லர்; எகிற வைக்கும் வகையில் மாஸ்ஸான அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.  இதனையடுத்து இப்படத்தின் பாடல்கள் உட்பட சில அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

வரும் 17ம் தேதி ஜெயிலர் செகண்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவும் விரைவில் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

இதனை இன்னும் எகிற வைக்கும் வகையில் மாஸ்ஸான அப்டேட் கொடுத்துள்ளார் ஜெயிலர் ஸ்டண்ட் கோரியோகிராபர் கெவின்.

ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இதுவரை வெளியான தகவல்களின் படி, ரஜினி ஜெயிலர் ரோலில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், இதில் செம்ம ட்விஸ்ட் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று மாலை வெளியான ஜெயிலர் செகண்ட் சிங்கிள் ப்ரோமோவில் ரஜினியின் மாஸ் லுக் ஒன்று இணையத்தை கலங்கடித்து வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படம் குறித்து அதில் பணியாற்றியுள்ள ஸ்டண்ட் மாஸ்டர் கெவின் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதாவது ஜெயிலர் படத்தை பார்க்க தியேட்டருக்கு லேட்டாக செல்ல வேண்டாம் என அவர் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

ஏனெனில் ஜெயிலர் படத்தின் முதல் காட்சியில் இருந்தே தலைவரின் சம்பவம் ஸ்டார்ட் ஆகிவிடும். அதன்பிறகு வரும் ஒவ்வொரு சீனும் ரஜினி ரசிகர்களுக்கு வெறித்தனமான ட்ரீட் தான் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தப் படத்திற்காக இயக்குநர் நெல்சன் செம்ம மாஸ்ஸான திரைக்கதையை எழுதியுள்ளார் என்றும், இதனால் ஜெயிலரில் சூப்பர் ஸ்டாரின் ஆட்டம் அதகளமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைப் போல ஜெயிலர் திரைக்கதையும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் எனவும் ஸ்டண்ட் கோரியோகிராபி கெவின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version