Site icon Tamil News

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு

நியூஜெர்சியில் வீடு ஒன்றில் இருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ப்ளைன்ஸ்போரோ நகரில் வீடு ஒன்றில் இருந்து கடந்த 4 ஆம் தேதி 4 பேர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இறந்தவர்கள் தேஜ் பிரதாப் சிங் (43), அவரது மனைவி சோனல் பரிஹார் (42) மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் என அடையாளம் கண்டறிந்துள்ளனர்.

மேலும் அவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த வழக்கு கொலையாக விசாரிக்கப்பட்டு வருவதாக ப்ளைன்ஸ்போரோ டவுன்ஷிப் தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் சடலங்கள் இன்று உடற்கூராய்வு செய்யப்படுகின்றன.

Exit mobile version