Site icon Tamil News

டொனால்ட் ட்ரம்ப் நாளை கைது செய்யப்படும் சாத்தியம்

நிதிக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாளை (03) மன்ஹாட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், நீதிமன்றத்தில் சரணடைய டிரம்ப் தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க ஆபாச பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு 130,000 டொலர் கொடுத்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டின் மூலம், கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளான முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை டொனால்ட் டிரம்ப் பெற்றார்.

முன்னதாக, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜூலியஸ் கிராண்ட், குதிரையை வேகமாக ஓட்டியதற்காக 20  டொலர் அபராதம் விதிக்கப்பட்டார்.

 

Exit mobile version