Site icon Tamil News

யாழ்ப்பாணத்தில் கசிப்பு அருந்திய இளைஞன் இரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் புங்குடுதீவு பகுதியில்
இடம்பெற்றுள்ளது.

நிறை போதையில் இருந்த இளைஞன் திடீரென இரத்த வாந்தி எடுத்துள்ளார். அவரை உறவினர்கள் வைத்திய சாலையில் அனுமதித்த போது , அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கசிப்பு அருந்திய நிலையிலையே நிறை போதையில் இரத்த வாந்தி எடுத்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version