யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் புங்குடுதீவு பகுதியில்
இடம்பெற்றுள்ளது.
நிறை போதையில் இருந்த இளைஞன் திடீரென இரத்த வாந்தி எடுத்துள்ளார். அவரை உறவினர்கள் வைத்திய சாலையில் அனுமதித்த போது , அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கசிப்பு அருந்திய நிலையிலையே நிறை போதையில் இரத்த வாந்தி எடுத்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.