Site icon Tamil News

8 பிராதான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு!

8 பிராதான கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டத்தில், ஈடுபடவுள்ளது.

அதற்கமைவாக எதிர்வரும் புதன்கிழமை அனைத்து அரச தனியார் மற்றும் பெருந்தோட்டத் துறைகளில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு எதிராக உழைக்கும் மக்கள் போராட்டம் என்ற ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பிரதேச கல்வி அலுவலகங்கள் மட்டத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version