Site icon Tamil News

போர்த்துகலில் பற்றியெரியும் காட்டுத் தீ – 7 பேர் உயிரிழப்பு – சொத்துக்கள் சேதம்

போர்த்துகல் நாட்டில், அவீரோ மற்றும் விசியூ உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டுத் தீ உச்சக்கட்ட வேகத்தில் பரவி வருகிறது.

தீயை அணைக்கும் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீயில், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பரப்பு எரிந்து சாம்பலானது.

7 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமான வீடுகளும் தீயில் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவிபத்துக்குக் காரணம் என்ற சந்தேகத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version