Site icon Tamil News

கடும் வெப்பத்தால் திணறும் ஐரோப்பா! வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

ஐரோப்பா உட்பட உலகின் பல நாடுகளில் வெப்ப அலை தாங்கா முடியாத நிலையை எட்டியுள்ளது.

இதனால் உலக நாடுகள் தவித்து வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், போலந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வீசிவரும் வெப்ப அலையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் நீரூற்றுகளில் குளிர்ச்சியாக இருக்க முயற்சிக்கின்றனர்.

எதிர்வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பம் பதிவாவதால், வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version