Site icon Tamil News

கீவ்வைக் குறிவைத்து தாக்கிய ரஷ்யா – முறியடித்ததாகக் கூறும் உக்ரைன்

ரஷ்யா அண்மையில் பயன்படுத்திய ஏவுகணைகளையும் ஆளில்லா ட்ரோன்களையும் உக்ரைன் முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது விமான பாதுகாப்புப் படை அழித்துவிட்டாதாக உக்ரைன் கூறியுள்ளது.

ரஷ்யாவின் மூன்று ஏவுகணைகளும் எட்டு ஆளில்லா ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அது கூறியது.

இரண்டு வாரத்திற்குப் பிறகு முதல் முறையாகக் கீவ்வைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

வானில் இருந்து விழுந்த உடைந்த பாகம் தீப்பற்றியதில் ஒருவர் காயமடைந்தார்.

Exit mobile version