கொழும்பில் நேற்று (20.03) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களை வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கைது செய்யப்பட்ட துமிந்த நாகமுவ, லஹிரு வீரசேகர, ரத்கராவே ஜினரதன தேரர் மற்றும் பெண் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மேலும் 5 பேரையும் நாளை (22) வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர்களை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.