Site icon Tamil News

இலங்கையில் அதிர்ச்சி – மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

அனுராதபுரம் மாவட்டம் இப்பலோகம பிரதேசத்தில்  கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை இப்பலோகம ஹரிபிட்டியாகம பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 46 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவனுடன் ஏற்பட்ட குடும்ப சண்டடை முற்றியதால் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

தொழில் ஒன்றை செய்து வரும் இந்த பெண் நேற்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக தலாவ கெக்கிராவை பிரதான வீதிக்கு சென்றுக்கொண்டிருந்த போது, அங்கு வந்த கணவன், கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹரிபிட்டியாகம பிரதேசத்தில் உள்ள தேங்காய் சார்ந்த உற்பத்தி தொழிற்சாலைக்கு வேலை செய்வதற்காக குறுக்கு வீதியில் சென்றுக்கொண்டிருந்த போது இந்த கொலை நடந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் நீண்டகாலமாக குடும்ப சண்டை இருந்துவந்துள்ளதுடன் அது சம்பந்தமான முறைப்பாடுகள் இப்பலோகம பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மனைவியை கொலை செய்த சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். அவரை கைது செய்வதற்காக பொலிஸார் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version