Site icon Tamil News

பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் பல்கலைக்கழகங்கள்!

சம்பளப் பிரச்சினை, அரச பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதி வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக 17 பல்கலைக்கழகங்களும் இணைந்து நாளை (02.11) பாரிய அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.

நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியமும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து இன்று நடத்திய கலந்துரையாடலில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தின் வருமான வரி உள்ளிட்ட வரிக் கொள்கை நியாயமற்றது மற்றும் தன்னிச்சையானது என தொழிற்சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பு லோட்டஸ் வீதியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் இதில் இணைந்துகொண்டன.

Exit mobile version